Saturday, June 30, 2007

அம்மா எனும் உயிரெழுத்து...

ன்பை அணுவாக்கி என்னை உயிராகியவளே....!
சை உடன் என்னை தூக்கி ஆளாக்கியவளே....!
வுலகில் இல்லை இதற்கு மீறிய பந்தம்.....!
ருயிராய் உன்னுள் வளர்த்து உலகத்தில் ஓர் உயிராய் ஆக்கியவளே....!
ன் நினைவால் என் நினைவுடிினாய்....!
ண், உறக்கம் இன்றி என் உயிர், உடல் , வளர்த்தவளே....!
த்துணை துன்பம் நான் தந்த போதிலும்...!
ன் எனை உன் உயிர் கொடுத்து உருவாக்கினாய்...!
யம் இல்லை தாயே நின் அன்பால் வெல்ளுவேன் இவ்வுலகை....!
ரு கோடி ஜென்மங்கள் நான் பிறந்தாலும் இறக்காது நம் பந்தம்.....!
ராயிரம் யுகங்கள் கழிந்தாலும், நீதானே என் உயிர் மூச்சு.....!
:. றிணை ஆவேன் நானும் உன் நினைவைய் இழந்தால்........!

அம்மா....!

அன்புடன்
இரா . செந்தில் நாதன்

Friday, June 29, 2007

என் பேனா...?


என் பேனா...?

உன் விழி திரையில் நான் காட்சி அமைப்பேனா ...?
உன் செவ்விதழில் என் இதழ் வைப்பேனா ...?
உன் கார் கருங்கூந்தலில் என் கரம் கொண்டு மலர்பேனா ...?
உன் சிருங்கார காதுகளில் மோதிடும் தென்றிலாய் பிறப்பேனா ..?
நீ எனை நினைத்திருந்தால் நான் என்றும் இறப்பேனா..?
நான் என்றும் உனை நினைப்பேனா...?
அல்லது இன்றே...இறப்பேனா...?
உன் நினைவாலெதான் இக் கதை எழுத்துகின்றது, என் பேனா ..?
இதை நானும் சொல்ல மறைப்பேனா.....?

அன்புடன்
கரா . செந்தில் நாதன்

என் முதலெழுத்து..........


என் முதலெழுத்து..........
உயிர்...மூன்றெழுத்து...!
உயிர் தந்த ,அன்னை ...மூன்றெழுத்து...!
அன்னை காட்டிய அன்பு ..மூன்றெழுத்து...! அன்பினால் உருவாகும் ..கனிவு ,மூன்றெழுத்து...! கனிவினால் ,உருவான பணிவு..மூன்றெழுத்து...! பணிவு ஆல் உண்டான ..தகுதி ..மூன்றெழுத்து...! தகுதியால் வந்த திறமை மூன்றெழுத்து...!
திறமையினால் நான் அடைந்த பதவி..மூன்றெழுத்து...!
பதவியினால் நான் செய்யும் கடமை ..மூன்றெழுத்து...!
கடமையினால் எனை அடையும் வெற்றி...மூன்றெழுத்து...!
வெற்றியினால் கிட்டும் புகழ் ..மூன்றெழுத்து...!

இந்த மூன்றெழுத்தில் எல்லாம் நான் என்ற ஈரெழுத்து இருக்க காரணம் ஆன என் அன்னை நீயே என்றும் என் (உயிர்) முதலெழுத்து...!