Monday, July 2, 2007

காதல் செய்வீர்,காதல் செய்வீர்,


காதல் ...இந்த மூன்றெழுத்து மந்திரசொல் ..... உலகில் எத்துணையோ சரித்திரங்களை ... .உருவாக்கியும் , அழித்தும் , உள்ளது , எப்படி ...

காதல் ...மனிதனுக்கு மட்டுமே வரும் ...ஒரு உன்னதமான உணர்வு...ஏன் என்றால் , எந்த விலங்குகளும் , தன் இணை மீது அதுவும் கூடும் காலங்களில் மட்டுமே ... காமத்தால் காதல் கொண்டிருக்கும்...

ஆனால் மனிதன் மட்டுமே ..

தன் இணை மீது , கல்யாணத்திற்கு முன்னும் ,கல்யாணத்திற்கு பின்பும் ,பிறப்பிலும், இறப்பிலும், அவன் ,அவள் சுக ,துக்கங்களிலும்,காதல் கொண்டிருக்கின்றான்...

ஆனால் காதல் ஆணுக்கு , பெண் மீதும், பெண்ணுக்கு ஆண் மீது வருவது இன்றி, மனிதன் தம் தாய்நாடு,மொழி, இனம், வாழ்க்கை, லட்சியங்கள் ,ஆகியவற்றின் மேலும் காதல் கொண்டிருந்தான் அதனாலேதான் வெற்றியும் ,பெறுகின்றான்...
காந்திஜி தீண்டாமை ஒழிப்பு மீதும் ..., நேதாஜி தாய் நாட்டின் மீதும், பாரதி தமிழ் மீதும்...,அம்பானி தொழில் மீதும் , கொண்ட காதலினால்தான் வெற்றியும் பெற்றார்கள்... ஹிட்லர் , மாவீரன் என்று போற்றப்படும் அலெக்சாந்தர் ,முசொலின் , மேலும் பலர்

ஆகையால் மனிதனின் காதல் மண் , பெண் , பொன் , பொருள் , இவைகளை தாண்டி வாழ்வின் ,லட்சியங்களைும் ,சிந்தனைகள் மீதும் உருவாகும் போது ....அவன் வெற்றி பெற்று வரலாற்றில் ஜொலிகின்றான் ......

காதல் செய்வீர்,காதல் செய்வீர், இவ்வையகம் இன்புற ......

முதலில்...
வாழ்க்கையை காதல் செய்வீர் ,,,! வாழ்க்கையை காதல் செய்வீர் ,,,!
க இரா .செந்தில் நாதன்

No comments: